Sunday, October 23, 2011

RT @Rajanleaks: 
இதுல கடைசி வரிக்கு முந்தின அஞ்சு வரிய ஏன் தார் பூசி மொழுகுனாங்கன்னு தெரில!

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"

Wednesday, January 26, 2011

#tnfisherman

#TNfisherman இந்த ஹேஷ் டேகுடன் உங்கள் கண்டனங்களை ஒரு முறையேனும் டிவிட்டரில் அல்லது உங்கள் வலைப்பூவில் பதிவு செய்யுங்கள் . உங்கள் பதிவு ஏழை மீனவர்களை காப்பாற்ற உதவும். நாம் தெருவுக்கு வந்து போராட விட்டாலும், நமது குரல், கண்டனம் ஒரு மாற்றத்தை உருவாக்கும்.