Tuesday, January 31, 2012

கொங்குநாட்டு நாட்டுப்புறக் கதைகள்

ஒரு ஊர்ல மூணு அண்ணமாருங்க இருந்தாங்களாம் அவ‌ங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்தாளாம். அந்த அண்ணமாருங்கள்ல பெருய அண்ணன் பைத்தியகாரனாம். ஒரு நாள் ஒரு ராச்சசன் அவ‌ங்கூட்டு வழியா போகும் போது தங்கச்சிகாரிய பாத்து அவளதூக்கீட்டு போயிட்டானாம். காட்டுக்கு போன அண்ணங்காரங்க திரும்பி ஊட்டுக்கு வந்து பாத்தா ஆத்தாகாரி அழுதுட்டு இருந்தாளாம், என்னான்னு கேட்டா கதைய சொன்னாலாம். சின்ன அண்ணனுக ரெண்டு பேரும் தங்கச்சிய காப்பாத்தா கெழம்புனானுகளாம் அப்ப பெரிய அண்ணனும் நானும் வரேன் அடம்புடுச்சானாம். ஆத்தாகாரி ஒடனே ஒரு யோசன பண்ணி, சின்ன அண்ணனுகளுக்கு கட்டி சோறும், பெரியண்ணணுக்கு கட்டிசோத்துக்கு பதிலா மாட்டு சாணிய கட்டி குடுத்துட்டாலாம், பாதிவழியில சோறுல்லாம பெரிய அண்ணன் திரும்பி வந்துருவான்னு. ஆனா இந்த சூதை பெரிய அண்ணன் எப்படியோ கண்டுபிடிச்சுட்டான். மூணு பேரும் கால்ந‌டையா தங்கச்சிய தேடி போனாங்களாம். அப்ப மூணுபேருக்கும் பசி எடுத்துச்சு. சாப்புட போனப்ப பெரிய அண்ணன் கை கழுவிட்டு சாப்புட சொன்னான். அண்ணன் தம்பிங்க கைகழுவ போனப்ப பெரிய அண்ணன் கட்டுசோத்து பொட்டலத்தை மாத்தீட்டான். சாப்புட கட்டு சோத்தை பிரிச்சு பாத்த‌ப்ப சின்ன அண்ணங்க ரெண்டு பேரும் ஏமாந்து போயிட்டாங்க. பெரிய அண்ணன் ஒடனே "சேரி எஞ்சாப்பாட்ட எல்லாரும் சாப்புடலாம் ஆனா எம்பேச்சு தான் கேக்கோனும்"னு சொன்னானாம்.சின்ன அண்ணனுக ரெண்டு பேரும் வேற வழியில்லாம சேரினு சொல்லீட்டு சாப்புட்டாங்கலாம். பொறவு எல்லாரும் மறுபடியும் நடந்து போனாங்களாம். அப்ப ஒரு கழுதை எதுக்கால வந்துச்சாம், பெரிய அண்ணன் அந்த கழுதைய புடிக்க சொன்னானாம். சின்ன அண்ணங்க முடியாதுனு சொன்னகாட்டி அவங்க தின்ன சோத்தை கக்க சொன்னானாம். வேற வழியில்லாம கழுதைய புடுச்சுச்சுட்டு போகும் போது பன மரம் ஒன்னு கெடந்துச்சாம். அதையும் எடுதுக்க சொன்னானாம் பெரியண்ணான். எடுக்கலைனா தின்ன சோத்த கக்க சொல்லுவாண்னு அதையும் தூக்கீடு நடந்தாங்களாம். இப்படியே போற வழியிலிருந்த வண்ணாந்தாளியையும், ஒரு கருவண்டையும் புடுச்சுட்டு ராச்சசன் ஊட்டுக்கு போயிட்டாங்களாம். அவங்க போன நேரம் ராச்சசன் எரை தேட பொயிருந்தானாம். அப்ப தங்கச்சிய பாத்து பேசிட்டு இருக்குறப்ப ராச்சசன் வர சத்தங் கேட்டுச்சு, தங்கச்சிகாரி ஒடனே மூணு அண்ணங்களையும் அவங்க கொண்டாந்த கழுதை, தாளி, பனை மரம், வண்டு எல்லாத்தையும் அட்டாரில ஏத்தி உட்டுட்டாலாம். ராச்சசன் வந்த ஒடனே மனுச வாசம் அடிக்குது யார் வந்தாதுனு தங்கச்சிய கேட்டானாம். சின்ன அண்ணானுக சொன்னதையும் கேக்காம பெரிய அண்ணன் " நாந்தான்" னானாம் அட்டரில இருந்து. யார் நீ உந்தாலைய காட்டுனு சொன்னானாம் ராச்சசன். பெரிய அண்ணன் வண்ணாந்தாளி தூக்கி நீட்டுனானாம், அதைபாத்து இவ்வளா பெரிய தலையானு ராச்சசன் பயந்துட்டானாம், பொறவு எங்கால பாக்குரயானு பனமரத்தை எடுத்து நீட்டுனானாம். அதக்கண்டு ரொம்ப பயந்துட்டானாம் ரச்சசன். பெரியண்ணான் அப்புறம் எஞ்சத்ததை கேளுனு கழுதை காதுல கருவண்ட உட்டுட்டானாம். அந்த சத்தத்தை கேட்டு நம்மளவிட பெரிய ராச்சசன் வந்துருக்கான்னு ஓடியே போயிட்டானான் ராச்சசன். அப்புறம் என்ன அண்ணாந்தங்கச்சி நாலுபேரும் கடசிவரைக்கும் சந்தோசமா இருந்தாங்களாம்

Sunday, October 23, 2011

RT @Rajanleaks: 
இதுல கடைசி வரிக்கு முந்தின அஞ்சு வரிய ஏன் தார் பூசி மொழுகுனாங்கன்னு தெரில!

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"

Wednesday, January 26, 2011

#tnfisherman

#TNfisherman இந்த ஹேஷ் டேகுடன் உங்கள் கண்டனங்களை ஒரு முறையேனும் டிவிட்டரில் அல்லது உங்கள் வலைப்பூவில் பதிவு செய்யுங்கள் . உங்கள் பதிவு ஏழை மீனவர்களை காப்பாற்ற உதவும். நாம் தெருவுக்கு வந்து போராட விட்டாலும், நமது குரல், கண்டனம் ஒரு மாற்றத்தை உருவாக்கும். 

Friday, October 29, 2010

நடைவண்டி: Peepli [Live]: ஊடக பொறுக்கித்தனத்தின் உண்மை முகம்!

நடைவண்டி: Peepli [Live]: ஊடக பொறுக்கித்தனத்தின் உண்மை முகம்!
//காஷ்மீர் தொடங்கி தண்டகாரன்யா வரை அனைத்துமே இப்படித்தான். அதை கேள்வி கேட்பவர்கள் தேசதுரோகிகளாகி விடுகின்றனர். தேசபக்தி, எப்போதுமே நல்ல விற்பனைப் பொருள் என்பதால் இது காலம் காலமாக நடந்துகொண்டிருக்கிறது.//

மிக சரியாக சொன்னிர்கள்! தேசத்துரோகி பயங்கரவாதி வில்லன் கலவரக்காரர்கள் என்று சொன்னால் மட்டுமே போதும் இந்த ஆடு மந்தை கூட்டம் எந்த கேள்வியும் கேட்காமல், கண்ணெடுத்தும் பாராமல் கடந்து போய் விடும்.

ஊடகங்களும் அப்படியே வழிமொழிகின்றன. MAD CITY படம் ஊடகங்களின் இன்றைய மனநிலைமையை அப்பட்டமாக தெரிவிக்கின்றது.

Wednesday, June 16, 2010

தமிழ்த்தாய் வாழ்த்து

நீராருங் கடலுடத்த நிலமடந்தைக் கெழிலோழுகும்
சீராரும் வதனமெனத திகழ்பரதக் கண்டமிதில் ,
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்,
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே !
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிங்கே !
தமிங்கே !
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே !

Sunday, June 13, 2010

கணியன் பூங்குன்றன்

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

-கணியன் பூங்குன்றன்
(பாடல்192, எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூறு)
ஆங்கில மொழிபெயர்ப்பு :

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Death's no new thing; nor do our bosoms thrill
When Joyous life seems like a luscious draught.
When grieved, we patient suffer; for, we deem
This much - praised life of ours a fragile raft
Borne down the waters of some mountain stream
That o'er huge boulders roaring seeks the plain
Tho' storms with lightnings' flash from darken'd skies
Descend, the raft goes on as fates ordain.
Thus have we seen in visions of the wise ! -
We marvel not at greatness of the great;
Still less despise we men of low estate."

Kanniyan Poongundran in Purananuru,
Poem 192 - written in Tamil 2500 years ago
English Translation by Rev. G.U.Pope in Tamil Heroic Poems